கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 4 அக்டோபர், 2012

கேரள எல்கையில் "எஸ்' வளைவு பகுதியில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வலியுறுத்தல்

தமிழக - கேரள எல்கையில் "எஸ்' வளைவு பகுதியில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருமங்கலம் - கொல்லம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புளியரை வழியாக தினமும் தமிழகம் உட்பட பல்வேறு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றன.இந்நிலையில் தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியான "எஸ்' வளைவு பகுதியில் தேவாலயம் அருகே குறுகிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். மேலும் பராமரிப்பின்றி குழி விழுந்த நிலையில் காட்சியளிப்பதால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் வகையில் காணப்படுகிறது. இந்த குறுகிய பாலத்தை கடந்து கேரளா செல்லவே, வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.தற்போது கேரள மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுதுதும் பணி, சிறு பாலங்கள், தடுப்பு சுவர்கள், கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. எனவே "எஸ்' வளைவு மேல் பகுதியில் உள்ள குறுகிய பாலத்தை சீரமைக்கவோ அல்லது அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக