கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 10 ஜனவரி, 2013

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் பெண்கடத்தல்: ஒருவர் கைது


கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் பெண்ணை கடத்தியது தொடர்பாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணாபுரம்,கோழிக்குஞ்சு வலசைத் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி. இவரது மகள் லிங்கம்மாள் (17). இவர், சங்கரன்கோவிலிலுள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வருகிறார். இம்மாதம் 6-ம் தேதி வேலைக்குச் சென்ற லிங்கம்மாள் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து லிங்கம்மாளை கடத்திச் சென்றதாக கிருஷ்ணாபுரம், ராமரை (29) கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக