கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 22 ஜனவரி, 2013

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு 29 ம் தேதி நேர்முகத் தேர்வு துவக்கம்

சவூதி அரேபிய சுகாதார துறை அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிய விரும்பும் டாக்டர்கள், சிறப்பு டாக்டர்களுக்கான நேர்முகத் தேர்வு டில்லி, பெங்களூரு மற்றும் கொச்சியில் 29ம் தேதி முதல் பிப். 8 ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து பன்னாட்டு வேலைவாய்ப்பு கழக நிர்வாக இயக்குநர் பிரகாஷ் கூறியதாவது; சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் அனைத்து துறைகளிலும் 55 வயதிற்குட்பட்ட கன்சல்டண்ட்கள், சிறப்பு டாக்டர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். மேலும் மயக்க மருத்துவப் பிரிவின் தீவிர கண்காணிப்பு பிரிவில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற 45 வயதிற்குட்பட்ட ரெசிடெண்ட் டாக்டர்கள் தேவைப்படுகின்றனர்.
மேற்கண்ட பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சவூதி அரேபிய தேர்வுக் குழுவினரால் டில்லி, பெங்களூரு, கொச்சின் போன்ற இடங்களில் 29ம் தேதி முதல் பிப்.8 ம் தேதி வரை நடக்கிறது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கட், இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
எனவே விருப்பமுள்ள டாக்டர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை வலயசமறலை ருஆ கலரடந.யவல என்ற இ.மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்கள் அறிய 24464267, 24464268 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு நிர்வாக இயக்குநர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக