கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் வளாகத்தில் வசிப்பவர் ஹாஜா மைதீன் இவர் யானை கூண்டு அருகே கடந்த சில வருடங்களாக பெட்டி கடை நடத்தி வருகிறார் .நேற்று கடையை அடைத்து விட்டு இவர் வெளியூர் சென்றுள்ளார் . இந்நிலையில் நேற்று இரவு கடையில் திடிரென தீப்பிடித்துள்ளது . பிரிட்ஜ் , டி.வி , ஃ பேன் போன்றவை தீயில் கருகியுள்ளன. இதன் மதிப்பு பல ஆயிரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது .இத்தீ விபத்திற்கு மின்சார கசிவு காரணமா என்று விசாரணை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக