கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஏ ஆர் ரஹ்மானுக்காக காத்திருக்கும் ரஜினி

பொதுவாக இன்றைக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை வேண்டும் என்றால் படத்தை முடித்துவிட்டு பல மாதங்கள் வரை கூட காத்திருக்கும் நிலைதான் உள்ளது.

ராணா படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இதுவரை நான்கு பாடல்களை தயார் செய்துவிட்டாராம் ரஹ்மான். ரஜினி வந்து வேலையை ஆரம்பித்துவிடுவார்.


"ரஜினி சாருடன் பணியாற்றுவது மிகவும் சந்தோஷமான அனுபவம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து அவர் என்னைப் பார்க்கிறார். பல சிக்கலான தருணங்களில் அவரது வார்த்தைகள் உந்துதலாக இருக்கின்றன. அவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய. அவர் திரும்ப பழைய உற்சாகத்துடன் வந்து பட வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அவருக்காக காத்திருக்கிறேன். ராணாவுக்கு நான்கு பாடல்கள் ரெடி. ரஜினி சார் கேட்டுவிட்டு திருத்தங்கள் சொல்ல வேண்டும். அவ்வளவுதான்," என்றார்.

பொதுவாக அதிகம் பேசாத ரஹ்மான் இந்த அளவு உணர்ச்சிவசப்பட்டு பேசுவது இதுவே முதல்முறை.

சமீபத்தில் கூட, லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஹ்மான், அங்கு ரஜினியின் ரோபோ பாடலை இசைத்தபோது, ரஜினியின் படம் அரங்கிலிருந்த பெரிய திரைகளில் ஒளிரச் செய்தார். ரஜினி படத்தை பார்த்ததும் அந்த அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனராம். இதனை தனது தளத்தில் 'ரோபோ ரஜினி'க்கு கிடைத்த வரவேற்பு என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார் ரஹ்மான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக