கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 24 ஜூலை, 2011

வெளிநாடு வேண்டாம்


அஸ்ஸலாமு அலைக்கும்

கடையநல்லூர் வாசிகளே .

நமது ஊரில் ஏகப்பட்ட இயக்கங்கள் இருந்தாலும் படித்து முடித்து வரும் மாணவர்களே வெளிநாடு செல்ல வேண்டாம் என சொல்ல உள் நாட்டில் வேலை பாரு என சொல்ல விழிப்புணர்வு எற்படுத்த ஒரு இயக்கமும் இல்லை.அதனால் நாம் மீண்டும் மீண்டும் வெளிநாடு வருகிறோம்.முன்பு படிக்காமல் வந்தோம் சரி இப்பம் படித்து முடித்து ஊரில எவ்வளவு வேலை இருந்தும் வெளிநாடு வருவது முறையா?நமது ஊரை விட்டு வெளிய சென்றால் வேலைகள் அதிகம் உள்ளது உள் நாட்டிலே வேலை கிடைக்கும்.வெளி நாட்டில் உள்ள நாம் அவர்களுக்கு எடுத்து சொல்ல கடமை உள்ளது.ஊரில் இருக்கும் அவர்கள் எடுத்து சொல்ல மாட்டார்கள் ஏனெனில் நாம் இங்கு இருந்தால்தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.நாங்கள் படிக்காமல் இங்கு வந்து விட்டு கஷ்டப் படுகிறோம்.நீங்களாவது குடும்பத்துடன் நாட்டில் இருங்கள்.ஒருசிலர் என்னதான் மனைவி மக்களுடன் இங்கு இருந்தாலும் வயதான பெற்றோர்களை குடும்பம் களை விட்டு இருக்கலாமா?
இங்கு இருக்கும் நண்பர்கள் முடிந்த வரை ஊரில் செட்டில் ஆக முயற்சி செய்யவும்.ஊரில் இருக்கும் இயக்கங்களோ சொல்ல மாட்டார்கள் நாம் ஊருக்கு போனால் அவர்களுக்கு எப்படி நன்கொடை கொடுப்பது?
ஊரில் நடக்கும் தவறுகளும் குறையும்.வரும்கால குழந்தைகளும் நல்ல படிப்பார்கள்.
ஊரில் இருக்கும் இயக்கங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் தெரு பிரசாரம் செய்யுங்கள் வெளிநாட்டு வாழ்க்கையை நாடகம் என போட்டு காட்டுங்கள்.வெளிநாடு வருவதே தவிருங்கள் அல்லாஹ் நம்மளை சொர்கவாசியாக ஆக்கு வனாக ஆமீன் ஆமீன் ஆமீன்

இப்படிக்கு
வெளிநாடு வேண்டாம் நலச் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக