இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்
நல்லூர் மக்களுக்காக தற்பொழுது kdnl.net - என்ற இணையதளம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது எங்களுடைய சேவையை அவர்களுடன் இணைத்துக்கொண்டோம். இனி நீங்களும் kdnl.net-டுடன் இணைந்து கொள்ளுங்கள்
கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள
ஞாயிறு, 30 டிசம்பர், 2012
சனி, 29 டிசம்பர், 2012
கடையநல்லூரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத் திய காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரியும். பொய்வழக்கு போட்ட SI சிவன் மீதும் DSP ஜமீம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் கடையநல்லூர் முஸ்லிம்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ...
கடையநல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்ற 70 வயது ஓய்வு பெற்ற ஆசிரியரான அந்த முதியவரின் மீது குடி போதையில் வந்த வேல்சாமி என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தால் இடித்ததும் இல்லாமல். முதியவரை தவறாக பேசியதும் அவர் மீதே வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார் . இந்த பொய் புகாரை விசாரிக்காமல் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட காவி சிந்தனை கொண்ட SI சிவன் என்பவர் பொய் வழக்கு பதிவு செய்தார் இவ்வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்தில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற ஒய்வு பெற்ற ஆசிரியரின் மகன் V.K.முஹைதீன் பிள்ளை அவர்களையும் வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல் துறையின் இந்த அராஜக செயலை கண்டித்தும் ஆள்தூக்கி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் . கடையநல்லூர் முஸ்லிம்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ..இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் .அவர் தன உரையில் காவல் துறையை எச்சரிக்கும் பொருட்டும் ஆள்தூக்கி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் உரை நிகழ்த்தினார் .இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் ,நடுநிலையாளர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பையும் எச்சரிக்கையும் வெளிப்படுத்தினர்
காற்றழுத்த தாழ்வு : நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வடகிழக்கு பருவ மழையை நம்பி இருந்தனர். ஆனால் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புயல் சின்னம் உண்டானால் மட்டுமே மழை பெய்யும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பருவ மாற்றங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் 1 வாரமாக நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. பரவலாக லேசான தூறலுடன் மழை பெய்தது.
ஏற்கனவே கடும் பனிப்பொழிவால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தது. இந்த வேளையில் தற்போது பெய்து வரும் லேசான மழை மேலும் குளிரை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது. எனினும் அணைகளில் நீர்மட்டம் உயரும் அளவுக்கு பெரிய மழை இல்லாததால் நீர்மட்டம் பழைய நிலையிலேயே உள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 58.70 அடியாக உள்ளது. இங்கு வினாடிக்கு 379 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் 605 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை 69.09 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணை நீர்மட்டம் 71.67 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 144 கன அடி தண்ணீர் வருகிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடனா அணை நீர்மட்டம் 60.50 அடியாகவும், ராமநதி அணை 54.25 அடியாகவும், கருப்பாநதி அணை 51.84 அடியாகவும் உள்ளது. இதே போல் குண்டாறு அணை 33.45 அடியாகவும், வடக்கு பச்சையாறு 20.50 அடியாகவும், நம்பியாறு 18.24 அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 10.75 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 64 அடியாகவும் உள்ளன.
அணைப்பகுதியில் பாபநாசம் அணையில் 2 மி.மீ. மழையும், சேர்வலாறில் 5 மி.மீ. மழையும், மணிமுத்தாறில் 1.2 மி.மீ. மழையும், ராமநதி, கருப்பாநதி அணையில் தலா 2 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் 1 வாரமாக நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. பரவலாக லேசான தூறலுடன் மழை பெய்தது.
ஏற்கனவே கடும் பனிப்பொழிவால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தது. இந்த வேளையில் தற்போது பெய்து வரும் லேசான மழை மேலும் குளிரை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது. எனினும் அணைகளில் நீர்மட்டம் உயரும் அளவுக்கு பெரிய மழை இல்லாததால் நீர்மட்டம் பழைய நிலையிலேயே உள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 58.70 அடியாக உள்ளது. இங்கு வினாடிக்கு 379 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் 605 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை 69.09 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணை நீர்மட்டம் 71.67 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 144 கன அடி தண்ணீர் வருகிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடனா அணை நீர்மட்டம் 60.50 அடியாகவும், ராமநதி அணை 54.25 அடியாகவும், கருப்பாநதி அணை 51.84 அடியாகவும் உள்ளது. இதே போல் குண்டாறு அணை 33.45 அடியாகவும், வடக்கு பச்சையாறு 20.50 அடியாகவும், நம்பியாறு 18.24 அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 10.75 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 64 அடியாகவும் உள்ளன.
அணைப்பகுதியில் பாபநாசம் அணையில் 2 மி.மீ. மழையும், சேர்வலாறில் 5 மி.மீ. மழையும், மணிமுத்தாறில் 1.2 மி.மீ. மழையும், ராமநதி, கருப்பாநதி அணையில் தலா 2 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
ஆண் குழந்தை யாருக்கு சொந்தம்?: பெற்றோர்- குழந்தைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை
திருத்தணியை அடுத்த முருகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி கவுதமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கவுதமி பிரசவத்திற்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் பூந்தமல்லியை அடுத்த வேலப்பன் சாவடியை சேர்ந்த அன்பரசு மனைவி அருணா 3-வது பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
இருவருக்கும் ஒரே நாளில் (27-ந்தேதி) அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்தது. முதலில் கவுதமிக்கு ஆண்குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டு அவரது கணவரிடம் குழந்தையை காண்பித்தார்கள். அடுத்ததாக அருணாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி அவரது கணவரிடமும் குழந்தையை காட்டி கையெழுத்து பெறப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. முனிரத்தினம்- கவுதமிக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கவில்லை. இரண்டு பெண்களும் அருகருகே இருந்ததால் குழந்தை மாறிவிட்டது. நாங்கள் செய்த தவறை பெரிதாக்க வேண்டாம் என ஆஸ்பத்திரி ஊழியர்கள் முனிரத்தினத்திடம் முறையிட்டனர்.
குழந்தையை திடீரென மாற்ற கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாது அதை ஏற்க மறுத்தார். எனக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது. அந்த குழந்தைதான் வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இதனால் குழந்தை மாறிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதற்கிடையில் தனக்கு பிறந்த ஆண்குழந்தையை என்னிடம் ஒப்படையுங்கள் என அன்பரசு ஒரு புறம் பிரச்சினையை கிளப்ப, இரண்டு பெற்றோர்களும், உறவினர்களும் ஆஸ்பத்திரியில் திரண்டுவிட்டனர். ஆண் குழந்தையை கேட்டு 2 பெற்றோர்களும் முரண்டு பிடிப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது.
பிரச்சினைக்குரிய 2 குழந்தைகள், அவர்களுடைய 2 பெற்றோர்கள் ஆகிய ஆறு பேருக்கும் இந்த சோதனை விரைவில் நடத்தப்படுகிறது. அவர்களுடைய ரத்தங்களை எடுத்து சோதனை செய்வதால் இதன் முடிவு 2 வாரத்தில் தெரியும். டி.என்.ஏ. மருத்துவ முடிவை 2 பெற்றோர்களும் ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த உயர்ந்த அதிக செலவிலான மருத்துவ பரிசோதனை முடிவை இரு குடும்பத்தினரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
இந்த தவறுக்கு காரணமான ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இதுவரை மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், இது மிக சாதாரண மனித தவறு என்று மருத்துவமனை ஆர்.எம்.ஏ. தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 28 டிசம்பர், 2012
புதன், 26 டிசம்பர், 2012
கடையநல்லூர் விரைவில் தாலுகா அறிவிக்கப்படலாம்
கடையநல்லூர் தாலுகா அமைவதற்கான அனைத்து ஆரம்பக்கட்ட பணிகளும் வருவாய்த்துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தாலுகா எல்கை தொடர்பான வரைபடங்கள் அரசுக்கு அனுப்பபட்டு வருகிறது.நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைக்கப்பட வேண்டுமென கடந்த பல வருடங்களாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைய ஏற்பாடு செய்யப்படு மென தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் செந்தூர்பாண்டியன் இதே வாக்குறுதியை அளித்திருந்தார். இதனிடையில் இவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போதே இதற்கான அறிவிப்பு வெளிவரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் நெல்லை மாவட்ட கலெக்டர் சமய மூர்த்தி பேசுகையில் : - கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அலுவலகம் அமைக்க அரசு முன்வரவேண்டுமென கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கலெக்டர்கள் மாநாட்டில் தெரிவித்த மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் தற்போது அதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறையினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது கடையநல்லூரை பொறுத்தவரை தென்காசி தாலுகாவில் இடம்பெற்றுள்ளது. கடையநல்லூர் பிர்கா, சேர்ந்தமரம் பிர்கா மற்றும் சிவகிரி தாலுகாவில் உள்ள நகராட்சி ஆகியனவற்றை ஒன்றிணைத்து கடையநல்லூர் தாலுகாவில் இடம் பெறும் வகையில் பஞ்.,கள் பிர்கா வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.தற்போது கடையநல்லூர் தாலுகா அமையும்போது அதற்கான எல்கை எந்த பகுதியில் இருக்க வேண்டுமென்பது தொடர்பான வரைபடங்கள் வருவாய்த்துறை மூலம் அளவிடப்பட்டு வருகிறது. மேலும் கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெறக்கூடிய பஞ்.,கள், டவுன் பஞ்.,கள், நகராட்சிகள் போன்றவை குறித்த பட்டியல்கள் தொடர்பான கருத்துருக்களும் கோரப்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கடையநல்லூர் தாலுகா அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு இருக்குமென்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தாலுகா அலுவலகம் எந்த இடத்தில் அமையக்கூடும் என்பது தொடர்பான சர்வே நம்பர்களையும் வருவாய்த்துறை மூலம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







