கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி: அதிமுக சார்பில் 9 பேர் விருப்ப மனு


கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு, போட்டியிட அதிமுகவினர் 9 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர்.     கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான விருப்பமனு தாக்கல், அமைச்சர் செந்தூர்பாண்டியன் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் அதிமுக சார்பில் 9 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:

      மருத்துவர் சஞ்சீவி (மாவட்ட மருத்துவரணித் தலைவர்),கிட்டுராஜா (நகரச் செயலர்), முகமது மைதீன் (ஜெ.பேரவைச் செயலர்), முகையதீன்பிச்சை  (ஜெ.பேரவை துணைத் தலைவர்),அமானுல்லா (வார்டு பிரதிநிதி),சுப்பிரமணியன் (முன்னாள் வார்டு செயலர்),பரக்கத் நிஷா (இளம்பெண்கள் பாசறை), கமாலுதீன் (ஜெ.பேரவைத் தகவல் தொடர்பாளர்), முத்துலட்சுமி (அதிமுக உறுப்பினர்).

கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு: இதற்கிடையே கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாக விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ள பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக